முதுகுளத்தூரில் சான்றோர் சந்திப்பு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை தந்தார்கள்.

மாவட்டத்தில் மஜக-வை பலப்படுத்தும் நோக்கில் பிரமுகர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று முதுகுளத்தூரில் சான்றோர் சந்திப்பு நடைபெற்றது. ஜமாத் தலைவர் கரீம் அவர்கள் தலைமையில் மேலப்பள்ளியில் பொதுச் செயலாளர் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது .

அதன் பிறகு கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது 1939 முதல் ஜமாத் சார்பில் நடத்தப்பட்டு வரும் பள்ளிக்கூட பணிகளுக்கு பொதுச் செயலாளர் அவர்கள் வாழ்த்துக்களை கூறினார்கள்.

ஆரம்ப பள்ளிக்கூடமாக தொடங்கப்பட்டு இன்று மேல்நிலை பள்ளியாக உயர்ந்து சிறப்புடன் இயங்கி வரும் இங்கே பல்வேறு சமூக மாணவர்களும் பயின்று வருகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது.

இந்நிகழ்வுக்கு பிறகு பல பிரமுகர்களும் மஜக-வின் பணிகளை கேட்டறிந்தனர்.

இதில் மாநில துணை செயலாளர் பேராவூரணி சலாம், மேற்கு மாவட்ட பொருப்புக்குழு தலைவர் மீசல் கனி, கிழக்கு மாவட்ட பொருப்புக்குழு தலைவர் முகவை நசீர், கீழை. இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.