தர்மபுரி மாவட்ட நிர்வாக கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் தர்மபுரி மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் A.ஜவஹர் பாஷா தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளரும், மாநிலத் துணைச் செயலாளருமான ஈரோடு பாபு ஷாஹின்ஷா அவர்கள் பங்கேற்று மாவட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில் புதிய கிளைகள் அமைப்பது, கொடியேற்று நிகழ்வுகள் நடத்துவது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஹபீஸ், மாவட்ட இளைஞரணி செயலாளர் பயாஸ், மாவட்ட இளைஞரணி பொருளாளர் சையது உமர், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்கள் ரியாஸ், லியாகத், சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் தஸ்தகீர் விவசாய அணி பொருளாளர் தாஜுதீன், விவசாய அணி துணை செயலாளர் யாரப், வர்த்தக அணி செயலாளர்இதாயத்துல்லா உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.