திருவாரூரில்… ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு எதிரான அவதூறு வழக்கில் குஜராத்தின் சூரத் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இரண்டாண்டு சிறை தண்டணையை எதிர்த்தும், ராகுல் காந்தி அவர்களின் MP பதவியை பறித்த ஒன்றிய பாஜக அரசின் நாடளுமன்ற நடவடிக்கையை கண்டித்தும் திருவாருர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் மாவட்ட தலைவர் SMB.துரைவேலன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மஜக திருவாருர் மாவட்ட பொருளாளர் S. சேக் அப்துல்லா அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்,

மேலும் மஜக ஒன்றிய செயலாளர் அஹமது ஜலால், இளைஞர் அணி செயலாளர் அமீன், வசந்த் உள்ளிட்ட திரளான மஜகவினர் கலந்து கொண்டனர்.