மஜக திருச்சி மாவட்ட ஆலோசனை கூட்டம்..!!

திருச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் S.அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக
மஜக பொதுச்செயலாளர்
மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில துணைச் செயலாளர் அகமது கபீர் ஆகியோர் பொதுச் செயலாளருடன் உடன் இருந்தனர்.

இதில் “மக்களுடன் மஜக” பணிகள் குறித்து பேசப்பட்டது. எதிர்வரும் பிப்ரவரி-28 கட்சியின் 8-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்று நிகழ்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மாவட்ட பொருளாளர் A.பக்கீர் மொய்தீன் (பாபு பாய்), துணைச் செயலாளர்கள், M. சையது முஸ்தபா, அரியமங்கலம் s.ஜமாலுதீன், மைதீன், MJTS மாவட்ட தலைவர் M.ஷேக் அப்துல்லா, MJTS பொருளாளர் k.அன்வர் பாட்ஷா, MJTS துணைச் செயலாளர் s.சையது முகம்மது, ஆழ்வார் தோப்பு ஜாகிர் உசேன்,
IT WING பொறுப்பாளர் திருச்சி சேட்
ஆகியோர் கலந்து கொண்டனர்.