கோயில்களுக்கு இடையே நடைப்பாதை அமைக்க கோரி…

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக நாகை மாவட்டம் வேதராண்யம், தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஷேக் அகமதுல்லா (ஆம்ஸ்) தலைமையில் நிர்வாகிகள் நெடுஞ்சாலை உதவி பொறியாளரை சந்தித்தனர்.

இச்சந்திப்பில் 1-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள் கோவிலுக்கும், ஆஞ்சநேயர் கோவிலுக்கும் இடையே நடைப்பாதை அமைத்து தர கோரி மனு அளித்தனர்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக் மன்சூர் மற்றும் பேமஸ் சிவகுமார், மற்றும் கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.