சுல்தான்பேட்டையில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தீவிர பரப்புரை!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திரு EVKS. இளங்கோவன் அவர்களை ஆதரித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தீவிர பரப்புரை மேற்கொண்டார்.

அவருடன் துணைப் பொதுச் செயலாளரும், தேர்தல் பணிக்குழு தலைவருமான செய்யது அகமது பாருக், மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில துணைச் செயலாளரும், தேர்தல் பணிக்குழு துணை தலைவருமான பாபு ஷாகின்ஷா ஆகியோரும் பங்கேற்றனர்,

சுல்தான் பேட்டை பகுதியில் திரண்டிருந்த மக்களிடம் பெரியார் குடும்பத்து பேரனுக்கு வாக்களியுங்கள் என்று பேசினார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிப் பெற வேண்டும் என்றும் கூறினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட மஜக-வினர் கொடிகளுடன் பரப்புரையில் சுற்றி வந்தனர்.

மேலும் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் சபிக் அலி, மேற்கு மாவட்ட செயலாளர் அந்தியூர் ஷாநவாஸ், சேலம் மாவட்ட செயலாளர் சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கொடிவேரி சாதிக், பொதக்குடி ஜெய்னூதீன், கருர் மாவட்ட துணை செயலாளர் உவைஸ் அஹமது, மேற்கு மாவட்ட துணை செயலாளர் ஜாகீர், IT WING மண்டல செயலாளர் எஹ்சானுல்லா மற்றும் மாவட்ட iT WING பாசித் , மாவட்ட இளைஞரணி திலிப், தினகரன், MJTS சபர் அலி, பகுதிச் செயலாளர்கள் ஜாவித், ஹாரிஸ், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.