மதுரை கொடிக்குளம் ஊராட்சி மன்ற தலைவரிடம் மஜகவினர் கோரிக்கை மனு.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக மதுரை மாவட்டம், கொடிக்குளம் ஊராட்சி மன்ற தலைவரை மனிதநேய ஜனநாயக கட்சியின் MJTS மாநில பொருளாளர் புதூர் கனி தலைமையில் மஜகவினர் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்க கோரி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்டத் துணை செயலாளர் சுலைமான், விவசாய அணி செயலாளர் சோனை, ஒன்றிய துணைச் செயலாளர் மூவேந்தரன், ஆகியோர் பங்கேற்றனர்