புதுக்கோட்டையில் நிர்வாகிகளை சந்தித்த மாநில பொருளாளர்!!

இன்று புதுக்கோட்டை மேற்கு மாவட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி யின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, அவர்கள் வருகை புரிந்தார்.

அவரை மாவட்டச் செயலாளர் முகமது ஜான், அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் வரவேற்றனர்.

அவருடன் மாநில துணைச் செயலாளர் துரை முகமது அவர்களும் உடன் இருந்தார் .

இச்சந்திப்பில் மாவட்டத்தில் கட்சியின் பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார், மேலும் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிஃப், மாவட்ட துணைச் செயலாளர் காதர் மைதீன், முகமது பிலால், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் முகமது பாரூக், புதுகை நகர செயலாளர் முகமது நிஷார், கரம்பக்குடி நகர செயலாளர் ஆசை அப்துல்லா, துறைமுகம் சிக்கந்தர், மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.