திருப்பூரில்! மஜக சார்பில் இரத்ததான முகாம்! துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் தொடங்கி வைத்தார்!

ஜுலை:25.,

மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் மாவட்ட செயலாளர் இக்பால் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் பாபு வரவேற்புரை யாற்றினார்.

முகாமை துணைப் பொதுச்செயலாளர் AK.சுல்தான் அமீர், அவர்கள் தொடங்கிவைத்து உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர்களாக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாநகர மேயர் தினேஷ்குமார், மண்டல தலைவர் சி.கோவிந்தசாமி, பெரிய பள்ளிவாசல் தலைவர் ஷாஜகான், ஜமாத்துல் உலமா மாவட்ட தலைவர் நாஸிர் அலி சிராஜி, தவத்திரு சுந்தரராஜ அடிகளார் திரு முருக நாதசாமி, திருமடம் திருமுருகன், ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

மேலும் மாமன்ற உறுப்பினர்கள், ஜமாத் நிர்வாகிகள், அறக்கட்டளை நிர்வாகிகள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று இரத்ததானம் செய்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முகம்மது அசாரூதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருப்பூர்_தெற்கு_மாவட்டம்.
24.07.2022