சுதந்திர பலஸ்தீனம் வாழ்க… அல்குத்ஸ் தினத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பதாகை ஏந்தினார்!

ஏப்ரல் 29., பலஸ்தீன மக்களின் சுதந்திரம், சுயமரியாதை, மண்ணுரிமை ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்து உலகமெங்கும் அல் குத்ஸ் தினம் என்ற பெயரில் உலக மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு ரமலானிலும் , அதன் கடைசி வெள்ளிக்கிழமை இது முன்னெடுக்கப்படுகிறது.

அமைதி பேரணிகள், ஒன்றுகூடல்கள் , கருத்தரங்குகள் என பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், ஜியோனி இஸ்ரேலியர்களுக்கு எதிராகவும் ஜனநாயக வழியில் பரப்புரைகள் நடைபெறுகின்றன.

இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சுதந்திர பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது வீட்டு வாசலில் பதாகை ஏந்தினார்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
29.04.2022