You are here

அந்தியூர் பேரூராட்சியில் மஜகவின் துணை பொ.செ. சையது அஹமது பாரூக் பங்கேற்று இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரம்!!

பிப்.17.,ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி வார்டு எண் 2மற்றும் 3 ல் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அதை தொடர்ந்து மஜக வேட்பாளர்களுக்கு இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு பிரச்சார நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் ஏ.கே.ஷாநவாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சையது அகமது பாரூக், அவர்கள் கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு ஆதரவாக வீதிவீதியாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் நசீர், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி, கொடிவேரி சாதிக் , நகரச் செயலாளர் மைதீன் பேக், நகர பொருளாளர் பிலால், நகர இளைஞரணி செயலாளர் கரீம், மற்றும் நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
17.02.2022

Top