
திருவாரூர்.பிப்.04., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் நகராட்சியில் 6-வார்டில் Y.சாகுல் ஹமீது அவர்களும், 8-வது வார்டில் மாவட்ட செயலாளர் P.M.A சீனி ஜெகபர் சாதிக் அவர்களும், மற்றும் 21-வது வார்டில் P.A.S.ஜெய்னுப் நாச்சியா அவர்களும் போட்டியிடுகிறார்கள்.
இன்று மூவரும் (04.02.2022) தங்களது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட அணி நிர்வாகிகள் நூரூல் அமீன், ஜபரூல்லா, நகர செயலாளர் முகம்மது ஆசிக், முன்னால் நகர செயலாளர் அப்துல் முகம்மது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_தேர்தல்_பணிக்குழு
04.02.2022