You are here

லப்பைகுடிகாடு பேரூராட்சியில் 2வது 5வது 6வது 8வது 9வது மற்றும் 12வது வார்டு… மஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.!

பெரம்பலூர்.பிப்.05., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிகாடு பேரூராட்சியில் 2-வார்டில் M.ஜாஸ்மீன் பானு அவர்களும், 5 -வது வார்டில் மாவட்ட செயலாளர் தாழம்பாடி முஜிப் ரஹ்மான் அவர்களும், 6-வது வார்டில் M.மாஷா பானு அவர்களும், 8-வது வார்டில் PM.சாகுல் ஹமீது அவர்களும், 9-வது வார்டில் TC கமால் பாட்சா அவர்களும், 12-வது வார்டில் PM. பம்பாய் சம்சுதீன் அவர்களும் போட்டியிடுகிறார்கள்.

நேற்று (04.02.2022) ஆறு மஜக வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் அப்துல் ரஹ்மான், ஜஹாங்கிர் பாஷா, வழக்கறிஞர் முகமது இஸ்மாயில், ஆசப் ராஜா, நகர நிர்வாகிகள் ஜாஹீர் உசேன், உமர், ஆசீம் பாஷா‌, அப்துல் காப், மற்றும் நகர கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#பெரம்பலுர்_தேர்தல்_பணிக்குழு
04.02.2022

Top