
தாம்பரம்.பிப்.04., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில், தாம்பரம் மாநகராட்சியின் 1-வது வார்டில் அனகாபுத்தூர் நகர பொருளாளர் இஸ்மாயில் அவர்களின் தாயார் மு.பாத்திமா அவர்கள் போட்டியிடுகின்றார்.
இன்று அவர் (04.02.2022) தனது வேட்பு மனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
நிகழ்வில் மாவட்ட செயலாளர் ஜாகிர், பொருளாளர் தில்சாத், மாவட்ட துணை செயலாளர் சமது, இளைஞரணி செயலாளர் முஸ்தபா, உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#செங்கை_வடக்கு_மாவட்டம்
04.02.2022