
கடலூர்.பிப்.03., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சியின் 23-வது வார்டில் S.ஹாரூன் ரஷீத் அவர்கள் போட்டியிடுகின்றார்.
இன்று அவர் (03.02.2022) தனது வேட்புமனுவை மாநில துணைச்செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் தலைமையில் சென்று தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.
இதில் மாவட்ட செயலாளர் மன்சூர், மாவட்ட துணைச் செயலாளர்கள் அஜ்மீர் கான், B.யாசீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கடலூர்_மாவட்டம்
03.02.2022