You are here

புளியங்குடி நகராட்சி 14வது வார்டு… மஜக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்..!!

தென்காசி.பிப்.03., தமிழகமெங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சி 14-வது வார்டில் மஜக மாவட்ட துணை செயலாளர் முஹம்மத் ஸலாஹுத்தீன் (ஜலால்) அவர்கள் போட்டியிடுகின்றார்.

இன்று அவர் (03.02.2022) தனது வேட்புமனுவை தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.

இதில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முஹம்மது இஸ்மாயில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பீர் மைதீன், மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தென்காசி_மாவட்டம்
03.02.2022

Top