73வது குடியரசு தின விழா.! மேட்டுப்பாளையத்தில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கிய மஜகவினர்!

ஜன.26., சுதந்திர இந்தியாவின் 75-ஆம் ஆண்டில் நம் நாட்டின் 73வது குடியரசு தின விழாவை இன்று கொண்டாடுகிறோம்.

குடியரசு தினத்தை தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக கோவை வடக்கு மாவட்டத்தில் மஜக மாவட்ட செயலாளர் சுல்தான், அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜகவினர் எழுப்பினார்கள்.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் காஜாமைதீன், முகம்மது நிவாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆரிப் அப்பாஸ், முபாரக், மகேந்திரன், ரபீக், இளைஞரணி மாவட்ட செயலாளர் முகமது ரபிக், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் அசாருதீன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது ஹாரிஸ், மருத்துவ சேவை அணி மாவட்ட பொருளாளர் இர்பான், இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமுகமது, மற்றும் மாவட்ட, நகர, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்…

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_வடக்கு_மாவட்டம்
26.01.2022