
சென்னை.ஜன.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8 அன்று “சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
அது தொடர்பாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து போராட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு நிகழ்வாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் சந்தித்து ஜனவரி 8 மத்திய சிறை முற்றுகை போராட்டத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.
சிறைவாசிகள் விடுதலை குறித்து சீமான் அவர்கள் தொடர் போராட்டங்கள் முன்னெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் அபு தாஹிர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
05.01.2022