
சென்னை.ஜன.04., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8 அன்று “சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
அது தொடர்பாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து போராட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு நிகழ்வாக இன்று இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் M.பஷீர் அஹமது அவர்களை சந்தித்து மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் ஜனவரி 8 மத்திய சிறை முற்றுகைக்கான அழைப்பிதழை வழங்கினார். அவருடன் மாநில பொருளாளர் குத்தூஸ் ராஜா உடன் இருந்தார்.
இந்நிகழ்வில் மஜக துணைப் பொதுச்செயலாளர் என்.ஏ.தைமிய்யா, தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன், துறைமுகம் அசன் அலி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
04.01.2022