NTF தலைமை நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ்..!

சென்னை.ஜன.04., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8 அன்று “சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.

அது தொடர்பாக முக்கிய பிரமுகர்களை சந்தித்து போராட்டத்திற்கான அழைப்பிதழ்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு நிகழ்வாக இன்று சென்னையில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு – (NTF) மாநில பொருளாளர் ஜாஹிர் ஹூசைன், துணைப் பொதுச்செயலாளர் கமருதீன் ஆகியோரை நேரில் சந்தித்து மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் ஜனவரி 8 மத்திய சிறை முற்றுகைக்கான அழைப்பிதழை வழங்கினார். அவர்களுடன் NTF சென்னை மண்டல செயலாளர் நிசார் அஹமது, சென்னை மண்டல துணைச் செயலாளர் பீர் முஹம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் நாகை மாவட்டம், நாகூரில் NTF-ன் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அவர்களை மஜக நாகை மாவட்ட செயலாளர் செய்யது ரியாசுதின் அவர்கள் சந்தித்து போராட்டத்திற்கான அழைப்பிதழை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் நிகழ்வில் மாநில துணைப் பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனிஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர் மஜக துறைமுகம் அசன் அலி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
03.01.2022