கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் அவர்களிடம் மஜக சார்பில் கோரிக்கை மனு..

கடலூர்.ஜன.04., 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8, 2022 அன்று கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.

இதனிடையே அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆங்காங்கே மஜக வினர் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேசிட இன்று முதல் மனு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனவரி 5 அன்று தமிழக சட்டமன்றம் கூட விருப்பதால், இக்கோரிக்கையை சட்டமன்றத்தில் எழுப்பு மாறும், குரலற்ற அம்மக்களுக்கு குரல் கொடுக்க கோரிய கோரிக்கை மனுவை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐயப்பன், MLA., அவர்களை மஜக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் மன்சூர், தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து கையளித்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் அஜ்மீர் கான், நகர பொருளாளர் ஹாருண்ரஷீத், நகர துணைச் செயலாளர் உமர் பாரூக், ஆகியோர் உடனிருந்தனர்.

#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்
04.01.2022