மருதநாயத்தின் தியாகத்தை போற்ற மணிமண்டபம் கட்ட வேண்டும்! மு.தமிமுன் அன்சாரி…

#இவர்களின்_தியாகத்தை_ஆவணப்படுத்த_வேண்டும்!

#திருமுருகன்_காந்தி…

மனிதநேய ஜனநாயக கட்சியின் இளைஞர் அணி சார்பில் கான் சாஹிப் @ மருதநாயகம் அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர் தூக்கிலிடப்பட்ட தினமான அக்டோபர் 15 அன்று காணொளி வழியே கருத்தரங்கம் இளைஞரணி மாநில செயலாளர் அஸாருதீன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.திருமுருகன் காந்தி அவர்கள் மருதநாயகத்தைப் போன்ற எண்ணற்ற தலைவர்களின் தியாகத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மருதநாயகத்தின் தியாக உணர்வை விரிவுரையாக எடுத்துரைத்து பேசினார். மேலும் மருதநாயத்தின் தியாகத்தை போற்றும் விதமாக மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பேசினார்.

நிகழ்வில் மாநில துணைச் செயலாளர்கள் பல்லாவரம் ஷஃபி, பாபு ஷாஹின்ஷா, அப்சர் சையத், நெய்வேலி இப்ராஹிம், நாகை முபாரக், IKP மாநில செயலாளர் லேனா இசாக், மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர் அஹமது உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மஜக சொந்தங்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தலைமையகம்
15.10.2021