ரமலான் மாதத்திற்கான அரிசியை பள்ளிவாசல்களுக்கு விரைந்து வழங்ககோரி மஜக மனு..! தலைமை செயலகத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் தைமிய்யா நேரில் வழங்கினார்..!


சென்னை.ஏப்.10.,

தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு ரமலான் மாதத்தில் வருடா வருடம் தமிழக அரசு சார்பாக அரிசி வழங்கப்படும்.

ஆனால் இவ்வருடத்திற்கான அரிசி வழங்குதல் குறித்தான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை, இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் அரசு முதன்மைச் செயலாளர் திரு.செந்தில்குமார் IAS., அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச்செயலாளர் புதுமடம் அனிஸ் ஆகியோர் சந்தித்து பள்ளிவாசல்களுக்கு விரைந்து அரிசியை அனுப்புமாறு மனு அளித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்திய_சென்னை
10.04.2021