கோவை கிணத்துகடவு தொகுதி வேட்பாளரை ஆதரித்து மஜக அவை தலைவர் நாசர் உமரி வாக்கு சேகரிப்பு!


கோவை:ஏப்.03.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை கிணத்துகடவு தொகுதியில் குறிச்சி பிரபாகரன், அவர்கள் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து கோவை சுந்தராபுரம், நூராபாத், போத்தனூர், குறிச்சி, ஆத்துப்பாலம், பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் அவை தலைவர் நாசர் உமரி, மாநில துணை செயலாளர் ஷமீம் அகமது, ஆகியோர் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தனர்.

இதில் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர் அலி, மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், மற்றும் பகுதி, கிளை நிர்வாகிகள், மற்றும் திரளான மஜக வினர் கலந்து கொண்டனர்.

தகவல்:

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING #MJK2021
#TNElection2021
#கோவை_மாநகர்_மாவட்டம்
02.04.2021