நிவாரண நிதி ஒப்படைப்பு..!

திருவாரூர்.செப்.04 ., கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருவாரூர் மாவட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வசூல் செய்யப்பட்ட நிவாரண நிதியை 4/9/2018 அன்று கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக் அவர்கள் மாவட்ட பொருளாளர் சேக் அப்துல்லா மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் ஆயிஷா ஆகியோர் முன்னிலையில் முதற்கட்டமாக ரூபாய் ஒரு லட்சத்தை மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன் அவர்களும், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் முஹம்மது மைதீன் அவர்களும், திருவாரூர், கொடிக்கால்பாளையம்,புலிவலம், பொதக்குடி, கூத்தாநல்லூர் மற்றும் முத்துப்பேட்டை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING.
#திருவாரூர்_மாவட்டம்.