தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக மஜகவினர் வாக்கு சேகரிப்பு!


மார்ச்.31.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் பழனி நாடார், அவர்கள் போட்டியிடுகிறார்.

அதைத்தொடர்ந்து தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தென்காசி நகர பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் பீர்மைதின், அவர்கள் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணைச் செயலாளரும் கழகப் பேச்சாளருமான வாவை இனாயத்துல்லாஹ் மாவட்டத் துணைச் செயலாளர் ஆதம்பின் ஹனிபா ஆகியோர் கலந்து கொண்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியதின் அவசியம் குறித்து உரையாற்றினார்.

இதில் திரளான மஜக வினர் பங்கேற்றனர்.

தகவல்:

#மஜக_தேர்தல்_பணிக்குழு
#தென்காசி_சட்டமன்ற_தொகுதி
#MJKITWING #MJK2021
#TNElection2021
30.03.2021