வேலுர் மாநகர மஜகவின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை

image

image

பிப்.09., நேற்று 08.02.17 மனிதநேய ஜனநாயக கட்சியினர் வேலூர் மாநகரில் பல வார்டுகளில் குப்பைகள் தூர்வாரப்படாத சூழலை தொடர்ந்து மாநகராட்சியின் 2 & 3 ஆகிய மண்டல அதிகாரிகளிடம் குப்பைகளை துர்வாரக்கோரி புகார் அளிக்கப்பட்டது. அதன் முதற்கட்ட பணியாக இன்று காலை 30 வது வார்டில் மாநகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றியும், குப்பை கொட்டும் இரும்பு தொட்டியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

எனவே மஜகவின் கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி நிர்வாகத்திற்கு எங்களது நன்றி கலந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

*களத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி*

தகவல்:
மஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு (MJK IT-WING)
வேலூர் கிழக்கு மாவட்டம்.
09.02.2017.