மஜக செங்கை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்பு..!!


செங்கல்பட்டு.மார்ச்.16.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஆலந்தூரில் மாவட்டச் செயலாளர் அல்தாப் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு மாவட்ட பொருளாளர் ஆலந்தூர் சலீம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது பங்கேற்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை 2021 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற செய்ய மஜகவினர் பம்பரம்போல் சுழன்று பணியாற்ற வேண்டும் என்று நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

முன்னதாக கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா, மாநில துணைச் செயலாளரும், செங்கை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி மற்றும் மாநிலத் துணைச் செயலாளர் நாகை முபாரக், மாநில இளைஞரணி செயலாளர் அசாருதீன் ஆகியோர் தேர்தல் பணிகள் குறித்தும், பிரச்சார வியூகங்கள் குறித்தும் நிர்வாகிகள் மத்தியில் எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில் மாணவர் இந்தியா மாநில பொருளாளர் பஷீர், மாவட்ட துணைச் செயலாளர்கள் தாம்பரம் ஜாகிர், தில்ஷாத்
ஈ.சி.ஆர் சமத், பல்லாவரம் அஜிஸ் மற்றும் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஃபாருக் மரைக்கார் பைசூல்ல, பல்லாவரம் நகர செயலாளர் ஷானவாஸ், ஆலந்தூர் நகர செயலாளர் அமீன், அனகாபுத்தூர் நகர செயலாளர் சலீம் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#TNElections2021
#MJK2021
15.03.2021