அறந்தாங்கியில் தஞ்சை பேரணிக்கு ஆதரவாக மஜக முன்னெடுத்த துண்டு பிரசுர விநியோகம்!


ஜன.20,
நாளை தஞ்சையில் நடைபெற உள்ள பேரணிக்கு அழைப்பு விடுத்து அறந்தாங்கி நகர் முழுவதும் மக்களை சந்தித்து துண்டு பிரசுர விநியோகம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி தலைமையில் தொடங்கியது.

மஜக விவசாய அணியின் மாநில செயலாளர் எஸ்.ஏ. சலாம் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரையைத் துவங்கி வைத்தார்.

இதில் மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில், தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, மாவட்ட விவசாய அணி செயலாளர் நாகூர் கனி ஆகியோர் முன்னிலையில் வகிக்க, மஜக நிர்வாகிகள் சாகுல் ஹமீது, முகம்மது அலியார், அப்துல் அமீது, கலந்தர் மைதீன், ஜலாலுதீன், சோலைமலை, முகம்மது ஆசிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.
19.01.2021