தஞ்சையில் உள்ளூர் மக்களை திரட்டும் இறுதிகட்டப் பணியில் மஜகவினர்!


ஜன.20,
நாளை நடைபெற உள்ள பேரணிக்கு உள்ளூர் மக்களை பெருமளவில் பங்கேற்க செய்யும் வகையில் மாவட்ட செயலாளர் அஹமது கபீர் தலைமையில் மஜகவினர் மக்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

தஞ்சாவூர் பர்மா பஜாரில் பேரணிக்கான விளக்க துண்டு பிரசுரங்களை மஜகவினர் விநியோகித்தனர்.

தொடர்ந்து ஜமாத்துக்கள், பிரமுகர்களை சந்தித்து அழைப்பு கொடுத்து வருகின்றனர்.

வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் போராட்டங்கள் குறித்த விழிப்புணர்வையும், பங்கேற்க வேண்டிய அவசியங்களை குறித்தும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், திருவையாறு ஒன்றிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர் ஹபீப் ரஹ்மான் தலைமையில் அழைப்புகள் கொடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதில், மாவட்ட பொருளாளர் அப்துல் ஜப்பார், தஞ்சை மாநகர செயலாளர் அப்துல்லாஹ், துணைச் செயலாளர் சாகுல் அமீது, வார்டு செயலாளர் காமில், திருப்பந்துருத்தி காலீத் ஆகியோர் தலைமையில் மஜகவினர் பங்கெடுத்துள்ளனர்.

சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வரும் மஜகவினருக்கான வழிகாட்டல்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.