கடலூர் தெற்கு மாவட்டத்தில் தேர்தல் ஆயத்த பணிகள்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பங்கேற்பு!


சிதம்பரம்.மார்ச்.14.,

இன்று கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரத்திற்கு தேர்தல் ஆயத்த பணி ஆலோசனைக் கூட்டத்திற்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., வருகை தந்தார், அவருடன் மாநிலச் செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் அவர்களும் வருகை தந்தார்.

அப்போது அவருக்கு சிதம்பரம் நகர நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் அவர்கள் மஜகவினர் இம்மாவட்டத்தில் போட்டியிடும் மதச்சார்பாற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெற செய்திட தீவிரமாக பணியாற்றிட வேண்டும் என்றார்.

மஜகவின் தேர்தல் நிலைபாடு பெரும் வரவேற்பு பெற்றதை அனைவரும் அவரிடம் தெரிவித்தனர்.

மாநில துணை செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் ஹமீது ஜெகபர், மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹுசைன், மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், முகம்மது இக்பால், கியாசுதீன், ரியாஸ், மாவட்ட MJVS செயலாளர் AMK முஹம்மது ஹம்ஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் நைனா முகம்மது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அப்துல்லா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் காஜா மைதீன், நகர செயலாளர் இப்ராஹிம் ஷா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#கடலூர்_தெற்கு_மாவட்டம்.