கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்கக்கோரி பிப்20 மக்கள் திரள் போராட்டம்! ஆதரவு கோரி பிரமுகர்களை சந்திக்கும் குழுவில் மஜக!!


பிப்.15,

குடந்தையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி எதிர்வரும் பிப்.20 அன்று மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடைப்பெற உள்ளது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு கோரி அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களை ஒருங்கிணைப்பு குழு தலைவர் ம.க. ஸ்டாலின் தலைமையில் மஜகவினர் சந்தித்து அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புகழ்மிக்க திருப்பனந்தாள் காசிமட அதிபர் ஶ்ரீலஶ்ரீ காசிவாசி முத்துகுமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் அவர்களை போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக சந்தித்து பிப்.20 நடைப்பெறும் போராட்டத்திற்கு துண்டறிக்கையை கையளித்து ஆதரவும், பங்கேற்கவும் அழைப்பு விடுத்தனர்.

இதில் பாமக சார்பில் ம.க.ஸ்டாலின், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் ராசுதீன், விடுதலை தமிழ்புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன், பாமக மாவட்ட துணைச்செயலாளர் ரவி கலியப்பெருமாள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மதி விமல், வி.த.பு கட்சி பொது செயலாளர் தளபதி சுரேஷ், மஜக மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஹசன், நாம்தமிழர் கட்சி குடந்தை தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், மாவட்ட தலைவர் உள்ளிட்ட போராட்டகுழுவினர் சென்றிருந்தனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.