ஏனங்குடியில் MJTS ஆட்டோ சங்க பெயர்பலகை திறப்பு விழா! மஜக மாநில துணைச்செயலாளர் நாகை முபாரக் பங்கேற்று திறந்து வைத்தார்!!



பிப்.07,

இன்று ஏனங்குடி ஆலமரத்தடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க பிரிவான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) ஆட்டோ சங்க பெயர் பலகை திறப்பு விழா MJTS மாவட்ட தலைவர் ஜாஹீர் ஹீசைன் அவர்கள் தலைமையிலும் MJTS மாவட்ட நிர்வாகிகள் தமிமுன் அன்சாரி, பரிதுதீன், ஆதினங்குடி சாகுல், முத்து முகம்மது ஆகியோர் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக் கலந்து கொண்டு MJTS தொழிற்சங்கத்திற்குட்பட்ட APJ அப்துல் கலாம் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் உள்ளூர் அனைத்து கட்சி பிரமுகர்கள், மஜக மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், ஒன்றிய செயலாளர் அன்வர்தீன், MJVS மாவட்ட பொருளாளர் பகுருதீன், தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட துணை செயலாளர் நிசாத் , ஆதலையூர், ஏனங்குடி, கேதாரிமங்கலம், வவ்வாலடி, துறையூர், கோட்டூர் கிளை நிர்வாகிகள் மற்றும் ஆட்டோ சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.