You are here

கோவை மாநகர காவல் ஆணையருடன் மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் சந்திப்பு!


பிப்.06.,

கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் கோவை சுல்தான் அமீர் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து பேசிய பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமன் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரியும், கோவை சிங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பின் ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்தை பேசிய அந்த அமைப்பின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்சங்கரை, கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரியும், கோரிக்கை வைத்தனர்.

மேலும் மஜக வின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் IKP மாநில செயலாளர் லேனா இஷாக், மாவட்ட செயலாளர் MH. அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் செய்யது இப்ராஹீம், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்டத் துணைச் செயலாளர் சிங்கை சுலைமான், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் நூருல் அமீன், உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
06.02.2021

Top