கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோரி கூட்டமைப்பு சார்பில் DGPயை சந்தித்து மனு..! மஜக சார்பாக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது பங்கேற்பு..!


சென்னை.பிப்.03.,

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் முகம்மது நபி அவர்கள் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார்.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் பதட்டமான சூழ்நிலை உருவானதன் காரணமாக தமிழக காவல்துறையால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கல்யாணராமனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கோரியும், மேலும் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக தொடர்ந்து பேசி வரும் பாசிச பயங்கரவாதிகளை கைது செய்து சிறையில் அடைக்க கோரியும். அவர்களது சமூக வலைதள கணக்குகளை முடக்கக் கோரியும்…

அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று தமிழக காவல் துறை தலைவர் திரு.ஜே.கே.திரிபாதி IPS, அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, துணை பொதுச்செயலாளர் N.A.தைமிய்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#தலைமையகம்
03-02-2021