அரசுப்பணிகளில் பயணிப்போருக்கு அப்துல் கலாமும், சகாயம் IASம் முன்னுதாரணங்கள்! புளியங்குடி Paart நிகழ்ச்சியில்_மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!


ஜன.27.,

தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் புளியங்குடியில் கல்வி சேவை ஆற்றி வரும் Paart அமைப்பின் செயலகத்திற்கு நேற்று வருகை மேற்கொண்டார்.

அரசு தேர்வுக்கு மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் அவர்களின் அறிவுசார் பணியை பாராட்டி பேசினார்.

அரசுப் பணிகளில் பயணிக்கும் போது அவரவர் அடையாளங்களையும், நம்பிக்கைகளையும் இழக்காமல் பணிபுரியும் சூழல் இயல்பாக இருப்பதை சுட்டிக் காட்டியவர், நேர்மை, கனிவு, துணிச்சல் ஆகியவை தான் முக்கியம் என்றும் அதற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், முன்னாள் கலெக்டர் சகாயம் IAS ஆகியோர் நல்ல முன்னுதாரணங்கள் என்றார்.

paart அமைப்புக்கு புத்தகங்கள் வாங்க உதவுவதாக கூறிய அவர், அதன் விழிப்புணர்வு பணிகள் மாவட்டம் முழுக்க விரிவடைய வேண்டும் என வாழ்த்தினார்.

அதன் நிர்வாகிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

அவருடன் மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன், மாவட்ட செயலாளர் பீர்மைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் முகமது இப்ராஹிம், மாவட்ட துணைச் செயலாளர் வாவை இனாயத்துல்லா, மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பீர் மைதீன், சங்கரன்கோவில் நகர செயலாளர் இத்ரீஸ், நகர பொருளாளர் முகமது இஸ்மாயில், மற்றும் உசேன், மாலிக், ஷேக் முகமது, மற்றும் மாவட்ட, நகர, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
24.01.2021