சமூக வலைதளங்களில் கட்டுப்பாடுகள் தேவை! விக்ரமசிங்கபுரம் ஜமாத்தார் வரவேற்பு நிகழ்வில் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!


ஜன.25.,

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விக்ரம சிங்கபுரம் ஜாமியா ஜீம்ஆ பள்ளியில் அவ்வூர் ஜமாத்தார் நடத்திய வரவேற்பு நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் “பிற மக்களோடு எவ்வாறு நட்புறவு பேன வேண்டும் “என்ற தலைப்பில் உரையாடினார்.

அதில் சமூக நல்லிணக்கத்தின் அவசியம் குறித்து, சுற்றுவட்டார மக்களுடன் நல்லுறவு பேணும் வழி வகைகள் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக பேசினார்.

கல்வி விழிப்புணர்வில் கவனம் செலுத்துவது குறித்தும் ஆலோசனை கூறியவர், சமூக வலைதளங்களில் பொறுப்பற்று சிலர் பதிவிடும் கருத்துக்கள் கண்டித்து பேசினார். அது போன்று பதிவிடுபவர்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்களை கண்டிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவரது உரை மிகவும் பயனுள்ள வகையிலும், பொறுப்புணர்வுடன் இருப்பதாகவும் ஜமாத்தினர் பாராட்டி வழிமொழிந்தனர்.

இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் அப்பாஸ், அம்பை ஒன்றிய செயலாளர் அன்சர் பாபு, ஒன்றிய துணை செயலாளர் ஜாஹிர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நெல்லை மாவட்ட துணை செயலாளர் செய்யது அலி, ஏற்பாடு செய்திருந்தார்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
24.01.2021