தென்காசி மஜக மாவட்ட அலுவலகம் திறப்பு! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார்!


ஜனவரி 25,

தூத்துக்குடி, நெல்லை , தென்காசி மாவட்டங்களில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் தொடர் கட்சி சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று இரவு நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரத்தில் ஜமாத்தினரின் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

அன்று இரவு 10.30 மணிக்கு தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலுக்கு வருகை தந்தார்.

3 மணி நேரம் தாமதமாக வந்த நிலையிலும், அந்த இரவில் திரளானோர் கூடி நின்று வரவேற்றனர்.

அங்கு நகர அலுவலகத்தை திறந்து வைத்து கட்சியினருடன் உரையாடி உற்சாகப்படுத்தினார்.

அடுத்த நாள் ஐனவரி 24 அன்று காலை புளியங்குடியில் கட்சி கொடியை ஏற்றினார்.

பிறகு Paart என்ற கல்வி அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு மத்தியில் உரையாற்றினார்.

மதியத்திற்கு பிறகு பண்பொழி, வடகரை, வாவா நகரம், அச்சன் புதூர், தென்காசி ஆகிய ஊர்களில் கட்சி கொடியை ஏற்றினார்.

நிறைவாக தென்காசியில் கட்சியின் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பிறகு தென்காசி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்து அவரும், மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்களும் உரையாற்றினர்

3 நாட்கள் தென் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்து விட்டு குற்றாலத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர் ,மஜக கடந்த ஒரு வருடத்தில் தென் மண்டலத்தில் சிறப்பான வளர்ச்சி சிறப்பாக இருப்பதாக கூறினார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட செயலாளர் பீர் மைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் முகமது இப்ராஹிம், மாவட்ட துணைச் செயலாளர் வாவை இனாயத்துல்லா, மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் பீர் மைதீன், சங்கரன்கோவில் நகர செயலாளர் இத்ரீஸ், நகர பொருளாளர் முகமது இஸ்மாயில், மற்றும் உசேன், மாலிக், ஷேக் முகமது, மற்றும் மாவட்ட, நகர, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்காசி_மாவட்டம்
24.01.2021