புற்றுநோய் ஒழிப்பு போராளி மருத்துவர் சாந்தா அம்மையார் மரணம்.! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!


ஜனவரி 19,

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் கடந்த 65 ஆண்டு காலமாக மருத்துவ அறத்துடன் தன்னலமின்றி சேவையாற்றி வந்த மருத்துவர் சாந்தா அம்மையார் அவர்கள் இறந்த செய்தி அறிந்த ஆழ்ந்த வருத்தமடைந்தோம்.

நம்பி வரும் புற்றுநோயாளிகளுக்கு கடமையும், மனிதாபிமானமும் பொங்க அவர் வழங்கிய கிசிச்சைகள் மிக சிறப்பானவை.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எளிய மக்களின் தாயாக அவர் கொண்டாடப்பட்டார்.

பத்மஸ்ரீ, பத்மபூஷன் போன்ற உயரிய விருதுகளை பெற்ற அவர், தனக்கு கிடைத்த வருவாயை தான் பணியாற்றிய நிறுவனத்திற்கே வழங்கிய மாமணி ஆவார்.

புற்றுநோய் ஒழிப்பு போராளியாக செயல்பட்டு பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றிய அவரது மரணம் அனைவரையும் வாட்டுகிறது.

அவரை இழந்து வாடும் சக மருத்துவர்கள், குடும்பத்தினர், பணியாளர்கள், அவரால் குணமடைந்தவர்கள் என அனைவரின் துயரத்திலும் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கிறது.

அனைவருடன் ஆறுதலையும் பகிர்ந்துக் கொள்கிறது.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
19.01.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.