முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்பு! இலங்கை அரசை கண்டித்து குடந்தையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஜக பங்கேற்பு!!


ஜன.12,
இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடிக்கப்பட்டது.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் குடந்தை காந்தி பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இப்போராட்டத்தில், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம் தலைமையில் நகர செயலாளர் ராஜ் முஹம்மது, பொருளாளர்
வஜீர் அலி மற்றும் ஹசேன் முஹம்மது உள்பட மஜகவினர் திரளான பங்கேற்றனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.