விவசாயிகளுக்கு விருந்தோம்பல் செய்த மஜக…!டெல்லியில்_ஆம்ஆத்மி.. தமிழகத்தில் மஜக என விவசாயிகள் பெருமிதம்…!


ஜன.11,

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஜனவரி 9 மற்றும் 10 தேதிகளில் நீதி கேட்கும் நெடும் பயணம் என்ற பெயரில் வாகன அணிவகுப்பும், ஊர்வலங்களும் நடைபெற்றது.

டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற இந்நிகழ்வுகள் கிராமங்கள், நகரங்களில் பேராதரவை பெற்றுள்ளது.

நேற்று தஞ்சாவூரில் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாய போராளிகள் திரண்டு வந்திருந்தனர்.

அங்கு வந்த அனைத்து விவசாயிகளுக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இரவு உணவு பொட்டலங்கள் வழங்கி உபசரிக்கப்பட்டது.

இதனால் விவசாய பெருங்குடி மக்கள் மிகவும் நெகிழ்ச்சியடைந்தனர்.

இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.R.பாண்டியன் அவர்கள் விவசாயிகளின் போராட்டங்களுக்கு அரசியலை கடந்து மஜகவும், அதன் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களும் ஆதரவளித்து வருவதை சிலாகித்து குறிப்பிட்டார்.

டெல்லியில் ஆம் ஆத்மி விவசாயிகளை உபசரிப்பது போல தமிழகத்தில் மஜக விவசாயிகளை உபசரிப்பதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மஜக விவசாய அணியின் மாநில செயலாளர் அப்துல் சலாம், தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் அகமது கபீர், தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஒரத்தநாடு பஷீர், தஞ்சை மாநகர செயலாளர் அப்துல்லா, திருவையாறு ஒன்றிய செயலாளர் ஹபீப் ரஹ்மான் முன்னிலையில் 50 க்கும் மேற்பட்ட மஜக தொண்டர்கள் விவசாயிகளுக்கு உணவுகளை வழங்கினர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_மாநகர்_மாவட்டம்.
10.01.2021