சென்னையில் மதிமுக தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை..! மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது தலைமையில் திரளான மஜகவினர் பங்கேற்பு..!


சென்னை.ஜன.11.,

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் தகர்க்கப்பட்டது, இச்சம்பவம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் அறிவிப்பை மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் அறிவித்திருந்தார். போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களை தொடர்புகொண்டு திரு.வைகோ அவர்கள் ஆதரவு கோரினார்.

அதனடிப்படையில் இன்று நடைபெற்ற முற்றுகை போரில், மஜக பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது தலைமையில் திரளான மஜகவினர் ஆவேச அலைகளோடு பங்கேற்றனர். அங்கு நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் கண்டன உரையாற்றினார். தொடர்ந்து பல்வேறு அமைப்புகள், கட்சிகளின் தலைவர்களும் உரையாற்றினர்.

நிறைவாக மதிமுக பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்கள் எழுச்சி பொங்க கண்டன உரையாற்றினார்.

போராட்டத்தில் மஜகவினர் கொடிகளோடு திரண்டுவந்து இலங்கை அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர், முற்றுகையின் நிறைவாக அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அனிஸ், திருமங்களம் சமீம், மத்திய சென்னை மேற்கு மாவட்டச்செயலாளர் சாகுல் ஹமீது, கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான், பொருளாளர் அப்பாஸ், வடசென்னை மாவட்ட செயலாளர் அன்வர், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அப்துல் கையூம், திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொருளாளர் பக்ருதீன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் காஜா மொய்தீன், மேற்கு மாவட்ட துணை செயலாளர் பக்கீர் மொய்தீன் உள்ளிட்ட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#MJK2021
#தலைமையகம்
11-01-2021