அதிரையில் இயல்புநிலை அதிரையில் மஜக துணைப்பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா முகாம்!


டிச.27,

நேற்று அதிரையில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வை தொடர்ந்து எழுந்த பதட்டம் தற்போது கட்டுப்பாட்டில் இருக்கிறது.

மஜக வேண்டுகோளுக்கு பிறகு அங்கு காவல்துறையின் நெருக்கடிகள் குறைக்கப்பட்டு குற்றவாளிகளை சுற்றியே நடவடிக்கை தொடர்கிறது.

இந்நிலையில் மஜக துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா இன்று அதிராம்பட்டினம் வருகை தந்து பல தரப்பினரையும் சந்தித்து பேசினார்.

இரவு மஜக மாவட்ட செயலாளர் அதிரை ஷேக் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகளுடன் சென்று DSP அவர்களை சந்தித்து பேசினார்.

நடந்து முடிந்த விரும்பத்தகாத சம்பவங்களை கண்டிப்பதாக கூறியவர், கைது செய்யப்பட்டவர்களில் உள்ள அப்பாவிகளை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

உண்மை குற்றவாளிகள் மீது எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் கூறினார்.

அவர் அங்கு ஜமாத்தினரையும் சந்தித்து நடப்பு நிகழ்வுகளை கேட்டறிந்தார்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்.