திருத்துறைப்பூண்டி கட்டிமேட்டில் வயலில் இறங்கி மஜகவினர் போராட்டம்! மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் பங்கேற்பு!!


டிச.27,
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கட்டிமேடு-ஆதிரெங்கம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக டெல்லியில் உயிர்தியாகம் செய்த விவசாயிகளின் படங்களை ஏந்தி வயலில் இறங்கி போராட்டம் மாவட்ட துணைச் செயலாளர் செய்யது மீரான் தலைமையில் நடைப்பெற்றது.

கண்டன முழக்கத்துடன் போராட்டத்தை துவக்கி வைத்து மஜக மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் அவர்கள் சட்டத்தினால் விவசாயிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளை விளக்கி உரையாற்றினார். மேலும், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ரஹ்மத்துல்லா BE அச்சட்டத்தை கண்டித்து பேசினார்.

இப்போராட்டத்தில், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா வெள்ளசாமி, ஆதிரெங்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகரன், கட்டிமேடு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் உள்பட திமுக, கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டு மஜகவின் இப்போராட்டத்திற்கு ஆதரவளித்தனர்.

இதில், மஜக மாவட்ட IT Wing செயலாளர் முகமது ஆசிப், நகர செயலாளர்கள் பசீர் அகமது, முகமது தௌபிக் முன்னிலை வகிக்க ஒன்றிய செயலாளர் ஆசீம் அலிம் வரவேற்க கட்டிமேடு கிளை செயலாளர் முகமது ஆசிப் நன்றி தெரிவித்தார். இதில் நாச்சிக்குளம் ரியாஸ் அகமது உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்.