மீமிசலில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக நூதன போராட்டம்!


டிச.26,

மனிதநேய ஜனநாயக கட்சி ஆவுடையார் கோவில் ஒன்றியம் சார்பாக மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடக்கூடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மீமிசலில், மாவட்ட துணை செயலாளர் செய்யது அபுதாஹிர் தலைமையில் போராட்டம் நடைப்பெற்றது.

இப்போராட்டத்தில் மாநில விவசாய அணி செயலாளர் பேரை.அப்துல் சலாம், மாவட்ட செயலாளர் முனைவர்.முபாரக் அலி, பொருளாளர் சேக் இஸ்மாயில் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

போராட்டத்தில் பங்கேற்ற மஜகவினர் தலையில் படுக்கையை சுமந்தவாறு கண்டன முழக்கங்களை எழுப்பி நூதனப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி, மாவட்ட துணை செயலாளர் சாஜிதீன், MJTS மாவட்ட தலைவர் முகம்மது குஞ்சாலி, MJVS பொருளாளர் முகம்மது அன்சாரி, மாவட்ட அணி நிர்வாகிகள் முகம்மது அல்காப், அப்பாஸ், அப்துல் ரஹிம், சீனிவாசன், செய்யது அபுதாஹிர், சம்சுதீன், நூர் முகம்மது, சுந்தர் ராஜன், மணிகண்டன், ஒன்றிய நிர்வாகிகள் இமாமுதீன், யாகூப் உசேன், முகம்மது சாலிகு, சதாம் உசேன், படிக்காசு உள்பட திரளான மஜகவினர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம்.