பன்னூலாசிரியர் யூசுப் Sp மரணம்! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!


பன்னூலாசிரியரும், மார்க்க அறிஞரும், த.மு.மு.க வின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவருமான யூசுப் SP அவர்கள் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் துயறுற்றோம்.

அவர்,எண்ணற்ற நூல்களை எளிமையான மொழி நடையில் தமிழ் உலகிற்கு தந்த சிறந்த எழுத்தாளர் ஆவார்.

கடினமான விஷயங்களை கூட எளிதில் புரிந்துக் கொள்ளும் வகையில் அவரது உரைகள் இருக்கும்.

நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

மஜக தொடங்கிய பிறகு அன்பு நிமித்தமாக எமது தலைமையகத்திற்கு வருவார்.நேசம் நிரம்ப பேசிவிட்டு செல்வார்.

அவர் இருக்கும் அவைகள் கலகலப்பாக இருக்கும். மனம் மகிழ பேசுவது அவரது சுபாவமாகும். அவர் கபடமற்றவர் என்பதால் எல்லோரிடமும் நெருங்கி பழகுவார். சிரித்த முகத்துடன் எல்லோரையும் சந்திப்பது அவரது இயல்பாகும்.

அவர் சிறுநீரக நோய் பாதிப்பால் அவதிப்பட்ட நேரத்தில், அவரை அடிக்கடி சந்தித்து ஆறுதல் கூறி வந்தோம்.

இன்று அவர் நம்மிடமிருந்து விடைபெற்று இறைவனிடம் சேர்ந்திருக்கிறார்.

அந்த வருத்தம் எங்களை போன்று அவரோடு நெருங்கிப் பழகியவர்களை வாட்டுகிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது பிழைகளை, குறைகளை இறைவன் மன்னித்து அவருக்கு உயரிய சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திக்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,

#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
15.12.2020