இளையான்குடி புதூரில் MJTS கிளை திறப்பு விழா..!!மஜக மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது திறந்து வைத்தார்..!!


நவ.13.,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூரில் 12-12-2020 அன்று மாலை 05.00 மணியளவில் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) ஆட்டோ நலச்சங்கத்தின் புதிய கிளை திறப்பு நிகழ்ச்சி T.K.பசீர் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது.

மீரான் கனி வரவேற்புரை நிகழ்த்தி, புதூர் தைக்கா பள்ளிவாசல் இமாம் இப்ராஹிம் பைஜி அவர்கள் துவாவை ஒதி நிகழ்ச்சியை தொடங்கினார்கள்.

இந்நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றிவைத்து, அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் முஹம்மது சைபுல்லாஹ், சிவகங்கை மாவட்ட செயலாளர் சல்லை காஜா மொய்தீன், நகர செயலாளர் உமர் கத்தாப், மற்றும் ஜமால் முகம்மது, நைனார் முஹம்மது உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை புதூர் கிளை நிர்வாகிகள் மற்றும் அஜ்மல் கான் மிக சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

MJTS நகர தலைவர் செக்கடி அத்தான் காஜாமைதீன் நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்.
12.12.2020