You are here

நிவர்புயல் : வடசென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களில் மஜக பொருளாளர் ஹாரூன் ரசீது நேரில் ஆய்வு..!


நிவர் புயலால் ஏற்படும் தொடர் தீவிர கன மழையின் காரணமாக வடசென்னை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது அப்பகுதிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் நேரில் பார்வையிட்டு, உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு மக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்தும், வெள்ள நீரை போர்க்கால அடிப்படையில் விரைந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி அவர்களை தொடர்பு கொண்டு நிலவரங்களை எடுத்துரைத்தார்..

பொருளாளர் உடன் மாநில துணை செயலாளர் ஷமீம் அகமது, மாவட்ட செயலாளர் அன்வர், ஹனிப், யூசுப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#CycloneNivar
#களத்தில்_மஜக
25-11-2020

Top