வேலூர் மாவட்டத்தில் மஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் கொடியேற்று நிகழ்வுடன் உற்சாக தொடக்கம்! தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு !


நவ.08.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் மாவட்டம் குடியாத்ததில் தீவிர உறுப்பினர் சேர்ப்பு முகாம் முதல் கட்டமாக உற்சாகமாக தொடங்கப்பட்டது.

குடியாத்தம் நகர செயலாளர் S.அனிஸ் தலைமையில் நடைப்பெற்ற இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அவைத்தலைவர் S.S.நாசர் உமரி மற்றும் மாநில துணைச்செயலாளர் S.G.அப்சர்சையத் ஆகியோர் கலந்துகொண்டு
முகாமை தொடங்கி வைத்தனர்.

மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸின் மற்றும் மாவட்ட பொருளாளர் I.முனவ்வர் ஷரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் திரளானோர் ஆர்வமுடன் படிவங்களில் கையொப்பமிட்டு மஜகவில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டனர், குறிப்பாக மாற்று கட்சியிலிருந்து மஜக-வில் இணைந்தது தங்களுக்கு மிகுந்த புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இளைஞர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது..

மேலும் இரண்டு இடங்களில் கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது, தொடர்ந்து மாவட்டத்தில் தொகுதி வாரியாக தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை அடுத்தடுத்து நடத்துவதற்கான பணிகளை மஜக வினர் முன்னெடுத்துள்ளனர்.

இம்முகாமில், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முபாரக் அஹ்மத், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் நிஜாமுத்தின், மாணவர் இந்தியா ஜீஷான் மற்றும் நகர மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட மஜகவினர் திரளாக பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKITWING
#MJK2021
#வேலூர்_மாவட்டம்.
08.11.2020