ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வரவேற்பு!


ஆன்லைன் சூதாட்டத்தால் பாதிப்புக்குள்ளாகி ஏராளமான உயிர்கள் பலியானதை தொடர்ந்து நேற்று கோவையில் பேட்டியளித்த தமிழக முதல்வர் அவர்கள், ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்.

கடந்த 2019, ஜூலையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதன் முதலில் இக்கோரிக்கையை மஜக சார்பில் நான் தான் எழுப்பினேன்.

அதன் பிறகு பாதிப்புகள் தொடர்ந்ததால்,பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இக்கோரிக்கையை வலியுறுத்தினர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் இதற்கு தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளதற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வரவேற்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதில் துரிதமாக முடிவெடுப்பது பல உயிர்களை காப்பாற்றும் என்பதால் தமிழக அரசு தாமதிக்காமல் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி,
6.11.2020